குன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: குன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கிற்கு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் குன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், உள்ளாட்சி தேர்தலுக்காக வார்ட்டு மறு வரையறை செய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில், குன்றத்தூரில் பட்டியலின வார்ட்டுகளாக இருந்த 5,6,7 ஆகியவற்றை இணைக்கப்பட்டு வார்டு 18 என ஒரே வார்டு ஆக உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் குன்றத்தூர் பேரூராட்சியில் இருந்து ஒரே பட்டியலின வார்ட்டு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், மனு குறித்து தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் நவம்பர் 26-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்..












Click it and Unblock the Notifications