கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க கோவிலை திறங்க - முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை
கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க கோவில்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
சென்னை: கொரோனா எப்போது ஒழியும் என்று அந்த கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். முதல்வரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே கோவில்களை திறங்கள் கொரோனாவில் இருந்து காக்க நாங்கள் கடவுளிடம் முறையிட்டுக்கொள்கிறோம் என்று ஆன்மீகவாதிகள் கூறியுள்ளனர். கோவில்களை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க சமூக இடைவெளி வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. சர்ச்சுகள், மசூதிகளும் அடைக்கப்பட்டன. பல திருவிழாக்களும் ரத்தானது.
5 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில தளர்வுகளுடன் கடந்த 8ஆம் தேதி முதல் பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் அனுமதியில்லை
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவில்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடவில்லை. இந்த நிலையில்
கடந்த வாரம் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையங்களை பார்வையிட வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள்
கொரோனா பற்றி கேள்வி எழுப்பினர். கொரோனா எப்போது ஒழியும் என்று கேட்டதற்கு அது கடவுளுக்குத்தான் தெரியும் என்று
கூறினார்.

கடவுளிடம் முறையிடவேண்டும்
நெருக்கடியான கால கட்டத்தில் கடவுளை கை காட்டி விட்டு தப்பிவிட முடியாது என்று பலரும் விமர்சித்தனர். கடவுளையே பல மாதங்களாக பூட்டி வைத்திருப்பதால் இனி அரசை நம்புவது பயனில்லை விரைவாக கோவிலை திறங்கள் என்று கோரிக்கையை வைக்கின்றனர் ஆன்மீகவாதிகள். கடவுளிடம் முறையிட்டு கொரோனாவில் இருந்து எங்களை காத்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடவுளிடம் வேண்டுதல்
எந்த ஒரு பிரச்சினை என்றாலும் கடவுளிடம் முறையிடுவதும் வேண்டுதல் வைப்பதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் மக்களின் நம்பிக்கை. கடந்த பல மாதங்களாகவே கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் இறைவனை காண முடியாமல் பல பக்தர்களும் தவித்து வருகின்றனர் நோய் தாக்குதல் பற்றிய அச்சமும் அதிகரித்து வருகிறது.

ஆறாம் கட்ட ஊராடங்கு
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் தளர்வுகள் இன்றி மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கோவில்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications