தமிழகத்தில் இன்று.. 5,546 பேருக்கு கொரோனா.. 5,501 பேர் டிஸ்சார்ஜ்.. 70 பேர் மரணம்.. குறையாத தாக்கம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தமிழகம் முழுவதும் இன்று 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 70 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவபர்கள் எண்ணிக்கை 46,281 ஆகும்.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் 522 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 330 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20-க்கும் குறைவானர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் தமிழகத்தில் இன்று 70 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 17 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தப்படியாக சேலத்தில் 9 பேரும் வேலூரில் 8 பேரும் கொரோனா காரணமாக இன்று உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் கொரோனா தொற்றில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் விவரத்தை பார்த்தோம் என்றால் சென்னையில் 1,119 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 534 பேரும் அதிகபடியாக மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனா பாதிப்பு-உயிரிழப்பு-நலம்பெறுவது என இந்த மூன்றிலும் தமிழகத்தில் சென்னை முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications