இன்றே கடைசி.. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.. தவறினால் இதுதான் நடக்குமாம்..!
ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணுடன் இன்றே இணைக்க வேண்டும்
சென்னை: ஆதார் எண்ணை பான் கார்டு எண்ணோடு இணைப்பதற்கு இன்றைய தினமே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது... தவறினால் அபராதம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்பட்டு வருகிறது..
அதனுடன் ஆதார் நம்பரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இன்றே கடைசி
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது... இப்போது அந்த காலக்கெடு முடிவு பெறுகிறது.. கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட காலஅவகாசம் இன்றுடன் அதாவது வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது... இதுகுறித்து வருமான வரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆதார் எண்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ந் தேதி (இன்று) கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும். அத்துடன் 31-ந் தேதிக்கு பிறகு அபராதம் செலுத்தித்தான் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி இருக்கும். ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந் தேதிக்குள் இணைப்பதற்கு ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும். அதன்பிறகு இணைப்பதற்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தினால்தான், பான் எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிமாற்றங்கள்
இதுகுறித்து நிபுணர்கள் சொல்லும்போது, "வங்கி கணக்கு தொடங்குதல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கி கணக்கில் பணம் செலுத்துதல், அசையா சொத்துகள் வாங்குதல், பரஸ்பர நிதி பரிமாற்றம் போன்றவற்றுக்கு இந்த பான் நம்பர் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. ஒருவேளை இன்றுடன் நம்பர் செயலிழந்து விட்டால், எந்த பரிமாற்றங்களையும் செய்ய முடியாமல் போய்விடும்..

அபராதம்
அதனால், வரி செலுத்துவோர் தங்களது பான் நம்பருடன் ஆதார் நம்பரும் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமானவரி வெப்சைட்டில் உடனடியாக சரிபார்த்துக்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளனர். ஆதாருடன் இணைக்கப்படாத பான் நம்பரை செயல்படாத நம்பராக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் மும்முரமாகி உள்ளனர்.. கடந்த ஆண்டு ஆதாருடன் பான் கார்டு இணைக்க நிதி மசோதா திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications