டைம் நெருங்கிடுச்சே! சென்னையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட் தெரியுமா?
சென்னை: மின் பராமரிப்பு பணிக்காக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்பாதை பராமரிப்பு பணி, துணை மின் நிலையம் பராமரிப்பு, மின் கம்பங்களில் ஏற்பட்ட பழுதுகள் போன்றவற்றை பராமரிக்க அவ்வப்போது மின்சார வாரியம் சார்பாக பராமரிப்பு பணிகள் நடத்தப்படும். இது அந்தந்த பகுதி மக்களுக்கு முன்கூட்டியே எஸ்எம்எஸ் மூலமாகவோ இல்லாவிட்டால் செய்தித்தாள்களின் மூலமாகவோ தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் முழுக்க இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் எந்தெந்த இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது என்பதை பார்ப்போம். அதன் படி, பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (04.09.2023) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 2 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்ஹில்ஸ்: எல்லம்மன்பேட்டை, லட்சுமிபுரம், கோனிமேடு, பெரியார் நகர், கண்டிகை, சோலையம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தண்டையார்பேட்டை: டோல்கேட் வடக்கு முனைய சாலை, TH சாலை, திடீர் நகர், மீன்பிடி துறைமுகம், வீரராகவன் தெரு, VOC தெரு சிவகாமி நகர், ஜீவா நகர், மங்கம்மாள் தோட்டம் காலடிப்பேட்டை தியாகராயபுரம், PPD சாலை, மேட்டு தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications