Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சம் தொடும் தக்காளி.. சென்னையில் ரூ.200ஐ தொடும் ஒரு கிலோ தக்காளி.. எப்போது தான் விலை குறையும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி வரத்து தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில், இன்று கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் தக்காளி விலை ரூ.20 உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ.200ஐ தொடும் என அஞ்சப்படுகிறது.

நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தக்காளிச் செடிகளிலேயே அழுகிவிடுவதால் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 Tomato are being sold at Rs 200 per kg in many places in Chennai

இம்மாத தொடக்கத்தில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி சென்னை ரூ.100ஐ தாண்டியது. இதனால் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ. 180 வரை சென்றது. இடையில் தக்காளி விநியோகம் சற்றே சீரடைந்தது. இதனால் விலையும் குறைந்தது.

தக்காளி: அப்போது தக்காளி விலை கிலோ ரூ. 70 வரை கூட குறைந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாகத் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ 140க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.

தக்காளி விலை இன்று ஒரே நாளில் ரூ.20 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.20 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 Tomato are being sold at Rs 200 per kg in many places in Chennai

ரூ.200ஐ தொடும் தக்காளி: கடந்த 8 நாட்களில் மட்டும் சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய்க்குத் தக்காளி விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக அதிகரித்த தக்காளி விலை இப்போது ரூ. 180ஐ தொட்டுள்ளது. சில்லறை விலையில் தக்காளி விலை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. சில இடங்களில் தக்காளி விலை ரூ. 200ஐ தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வறண்ட வானிலை இருந்தாலும் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாகத் தக்காளிச் செடிகளிலேயே அழுகிவிடுவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து தக்காளி வரத்தைக் குறைத்துவிட்டது. இதன் காரணமாகவே தக்காளி விலை அதிகரித்துள்ளது.

எப்போது குறையும்: மொத்த விற்பனை செய்யப்படும் கோயம்பேடு சந்தையிலேயே தக்காளி விலை ரூ.180ஐ எட்டியுள்ள நிலையில், நகரில் பல இடங்களில் சில்லறை வர்த்தகத்தில் தக்காளி விலை ரூ.200ஐ தொட்டுள்ளது. தக்காளி விலை இப்படித் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி விலையைக் குறைக்கவும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வரத்துக் குறைவு காரணமாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.. நாட்டின் மழை இடங்களிலும் இன்னுமே கனமழை கொட்டி வரும் நிலையில், வரத்துச் சீராக இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே தக்காளி விலை மெல்ல குறையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+