ஆடிய ஆட்டம் என்ன..ரூ.150க்கு விற்ற தக்காளி கடும் வீழ்ச்சி..கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.7க்கு விற்பனை
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது., ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.150 வரை சென்ற நிலையில் தற்போது சரிந்துள்ளது. கடந்த மாதம் முழுக்க இந்தியா முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.

ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. அதன்பின் 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி மேலும் 20 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் சில நாட்களில் மேலும் உயர்ந்து 150 ரூபாயை எட்டியது. இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டது. ஜூலை மாதம் இதற்காக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பல ஹோட்டல்களில் தக்காளி இல்லாமல் உணவு சமைக்கப்பட்டது. தக்காளி பயன்படுத்தப்படும் உணவுகளின் விலைகள் உயர்ந்தது. பெரிய அமெரிக்க உணவகங்கள் கூட இந்தியாவில் தக்காளி இல்லாமல் சமைக்க தொடங்கின. காலம் மாறிய மழை, தக்காளி உற்பத்தி குறைவு இவையே தக்காளி விலை உயர்விற்கு காரணம் ஆகும்.

தக்காளி விலை உயர்வால் ஒரே நாளில் சில கோடிஸ்வரர்கள் ஆன சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது., ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.150 வரை சென்ற நிலையில் தற்போது சரிந்துள்ளது.
மற்ற பொருட்கள்: தமிழ்நாட்டில் தக்காளி விலை சரிவிற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் சரிந்து உள்ளது. தக்காளி இல்லாமல் கூட தமிழ்நாட்டில் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் துவரம் பருப்பு மிகவும் அவசியம். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு துவரம் பருப்பு மிக முக்கிய புரத சத்து கொடுக்கும் பொருள். அதன் விலையும் சரிந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. கடந்த மாதம் 140- 170 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை குறைந்துஉள்ளது. அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை குறைந்து உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications