ஆடிய ஆட்டம் என்ன..ரூ.150க்கு விற்ற தக்காளி கடும் வீழ்ச்சி..கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.7க்கு விற்பனை
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது., ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.150 வரை சென்ற நிலையில் தற்போது சரிந்துள்ளது. கடந்த மாதம் முழுக்க இந்தியா முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.

ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. அதன்பின் 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி மேலும் 20 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் சில நாட்களில் மேலும் உயர்ந்து 150 ரூபாயை எட்டியது. இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டது. ஜூலை மாதம் இதற்காக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பல ஹோட்டல்களில் தக்காளி இல்லாமல் உணவு சமைக்கப்பட்டது. தக்காளி பயன்படுத்தப்படும் உணவுகளின் விலைகள் உயர்ந்தது. பெரிய அமெரிக்க உணவகங்கள் கூட இந்தியாவில் தக்காளி இல்லாமல் சமைக்க தொடங்கின. காலம் மாறிய மழை, தக்காளி உற்பத்தி குறைவு இவையே தக்காளி விலை உயர்விற்கு காரணம் ஆகும்.

தக்காளி விலை உயர்வால் ஒரே நாளில் சில கோடிஸ்வரர்கள் ஆன சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது., ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.150 வரை சென்ற நிலையில் தற்போது சரிந்துள்ளது.
மற்ற பொருட்கள்: தமிழ்நாட்டில் தக்காளி விலை சரிவிற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் சரிந்து உள்ளது. தக்காளி இல்லாமல் கூட தமிழ்நாட்டில் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் துவரம் பருப்பு மிகவும் அவசியம். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு துவரம் பருப்பு மிக முக்கிய புரத சத்து கொடுக்கும் பொருள். அதன் விலையும் சரிந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. கடந்த மாதம் 140- 170 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை குறைந்துஉள்ளது. அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை குறைந்து உள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications