Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிய ஆட்டம் என்ன..ரூ.150க்கு விற்ற தக்காளி கடும் வீழ்ச்சி..கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.7க்கு விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது., ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.150 வரை சென்ற நிலையில் தற்போது சரிந்துள்ளது. கடந்த மாதம் முழுக்க இந்தியா முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.

Tomato price reaches another low after the heavy increase in last month

ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. அதன்பின் 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி மேலும் 20 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் சில நாட்களில் மேலும் உயர்ந்து 150 ரூபாயை எட்டியது. இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டது. ஜூலை மாதம் இதற்காக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் பல ஹோட்டல்களில் தக்காளி இல்லாமல் உணவு சமைக்கப்பட்டது. தக்காளி பயன்படுத்தப்படும் உணவுகளின் விலைகள் உயர்ந்தது. பெரிய அமெரிக்க உணவகங்கள் கூட இந்தியாவில் தக்காளி இல்லாமல் சமைக்க தொடங்கின. காலம் மாறிய மழை, தக்காளி உற்பத்தி குறைவு இவையே தக்காளி விலை உயர்விற்கு காரணம் ஆகும்.

Tomato price reaches another low after the heavy increase in last month

தக்காளி விலை உயர்வால் ஒரே நாளில் சில கோடிஸ்வரர்கள் ஆன சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது., ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.150 வரை சென்ற நிலையில் தற்போது சரிந்துள்ளது.

மற்ற பொருட்கள்: தமிழ்நாட்டில் தக்காளி விலை சரிவிற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் சரிந்து உள்ளது. தக்காளி இல்லாமல் கூட தமிழ்நாட்டில் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் துவரம் பருப்பு மிகவும் அவசியம். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு துவரம் பருப்பு மிக முக்கிய புரத சத்து கொடுக்கும் பொருள். அதன் விலையும் சரிந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. கடந்த மாதம் 140- 170 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை குறைந்துஉள்ளது. அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை குறைந்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+