கசக்கும் காபி.. விலை உயரப்போகுதாமே.. காலநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிப்பு.. உஷார்
சென்னை: காலநிலை மாற்றத்தின் காரணமாக காபி கொட்டைகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் காஃபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்து அவ்வப்போது ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால், இது எங்கேயோ நடக்கிறது, அண்டார்ட்டிகா, ஆர்டிக் பகுதியில் பனி பாறைகள் உருகினால் நமக்கென்ன? என்று பலரும் கண்டும் காணாதது போல் இருக்கிறோம். ஆனால் சமீப நாட்களாக இந்த காலநிலை மாற்றம் நம்மையும் வெகுவாக பாதிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த கனமழை இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை. அதேபோல சில நாட்களுக்கு முன்னர் சீனா எதிர்கொண்ட வெள்ளமும் நமக்கு செகென்ட் வார்னிங்.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக காபி பயிர்கள் விளைச்சல் சரிவை சந்தித்திருக்கின்றன. இது குறித்து காஃபி கொட்டை விற்பனையாளர்கள் கூறுகையில், "வழக்கமாக நாங்கள் நான் ரோபஸ்டா மற்றும் பீப்ரி போன்ற காஃபி கொட்டைகளை கிலோ ரூ.580க்கு வாங்கினோம். ஆனால் தற்போது இதன் விலை ரூ.650ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதுவே ரோபஸ்டா கொட்டைகள் கிலோவுக்கு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் காஃபி கொட்டைகளின் விலை உயரும். ஆனால் இந்த முறை ஜூலை மாதத்தில் விலை உயர்ந்திருக்கிறது. தென்னிந்தியாவை பொறுத்த அளவில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் காஃபி கொட்டைகள் அதிகம் விளையும். ஆனால் இந்த முறை பூக்கள் பூக்கும் காலத்தில் பருவமழை பெய்ததால் சுமார் 20% சதவிகிதம் வரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது" என்று உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
வழக்கமான காலத்தில் இந்த செர்ரிகள் சீராக பழுத்திருந்தால் இரண்டு சுற்று அறுவடைகளில் வேலை முடிந்திருக்கும். ஆனால் மழை பெய்ததால் இரண்டு சுற்றுக்கு பதில் 4 சுற்று அறுவடை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பெங்களூரில் காஃபி கொட்டை விற்பனை கடை வைத்திருப்பவர்கள் கூறுகையில், "விலையேற்றம் காரணமாக கடைசி 4 மாதத்தில் நாங்கள் 40 சதவிகிதம் அளவுக்கு வணிகத்தை இழந்திருக்கிறோம்.
காலங்காலமாக காஃபி கொட்டை விற்பனை செய்து வந்தவர்கள் தற்போது தங்களது கடையை மூடிவிட்டனர். சிலர் தரம் குறைவான கொட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதைவிட பெரிய பாதிப்பு என்னவெனில் பல வாடிக்கையாளர்கள் இன்ஸ்டன்ட் காஃபிக்கு மாறிவிட்டனர் என்பதுதான். இந்த பிரச்னை தவிர உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதால் எங்களால் பழைய விலைக்கு இதை விற்கவோ, கொள்முதல் செய்யவோ முடியவில்லை" என்று கூறியுள்ளனர். காஃபி கொட்டை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், காஃபி விலை உயர வாய்ப்பிருக்கிறது .
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications