ECR ரோட்டில் போக முடியாது.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. கேலோ சைக்கிளிங் போட்டியால் அறிவிப்பு!
சென்னை: கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டி நடைபெறுவதால் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி, சென்னை ஈ.சி.ஆரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவளம் முதல் மாமல்லபுரம் வரை, நாளையும், நாளை மறுநாளும் போக்குவரத்து மாற்றப்படுகிறது. பொதுமக்கள் ஓஎம்ஆர் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்தி கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications