Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை நோக்கி படையெடுத்த லட்சக்கணக்கான மக்கள்! பரனூர் டோல்கேட் டூ தாம்பரம் வரை டிராபிக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள், இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். எனவே, சென்னையின் என்ட்ரி பாயிண்டான பரனூர் டோல்கேட், பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு தீபாவளி அக்.31ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான அக்.30 அன்று பள்ளி, கல்லூரிகள் அரை நாட்கள் மட்டுமே செயல்படும் என சொல்லப்பட்டிருந்தது. அதே நேரம், தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.1ம் தேதியும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியாக அக்.31 தொடங்கி நவ.3ம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றனர்.

chennai diwali 2024 2024

சென்னையிலிருந்து சுமார் 15 லட்சம் பேர் பொது போக்குவரத்து மூலம் சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளியூர் செல்லும் மக்களுக்கு போதிய பேருந்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. இப்படி இருக்கையில், வெளியூர் சென்ற மக்கள் தற்போது சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து மக்கள் நேற்றிரவே பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்னை நோக்கி வர தொடங்கிவிட்டனர்.

இன்று காலை இவர்களில் பெரும்பாலானோர் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தாம்பரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதே நேரம், ரயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் பேருந்துகளில் சென்னை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். மறுபுறம் சொந்தமாக கார் வைத்திருப்பவர்களும் இன்று அதிகாலை சென்னைக்குள் நுழைந்துள்ளனர். இதனால் சென்னையின் என்ட்ரி பாயிண்ட்களான பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகளில், செங்கல்பட்டு மற்றும் சென்னை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரனூர் சுங்கசாவடியில் நெரிசலை சமாளிக்க, கூடுதலாக இரண்டு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+