Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் லீவு முடிஞ்சு சென்னைக்கு வர்றவங்க நோட் பண்ணுங்க.. 3 நாட்களுக்கு இந்த ரூட் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் பயணிகள் வருகை தந்ததால் சிங்கப்பெருமாள் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு சென்னையில் சில போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், சென்னை மற்றும் வெளியூர்களில் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களால் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

pongal 2025 traffic jam chennai 2025


விடுமுறைகள் முடிந்து திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்பதால், தற்போது சிலர் சென்னைக்கு புறப்பட தொடங்கினர். இன்று விடுமுறை தினம் என்றாலும் சென்னைக்கு குடும்பத்தோடு மக்கள் புறப்பட தொடங்கினர். இதனால் நேற்று இரவு நெல்லை, குமரி, தூத்துக்குடி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் சொந்த வாகனங்களிலும் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் இன்று ஒரே நேரத்தில் குவிந்ததால், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

குறிப்பாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால், சிங்கப்பெருமாள் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முதலே வாகனங்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.

தொடர்ந்து வாகனங்கள் அதிக அளவில் வந்துகொண்டு இருப்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னயில் 3 நாட்களுக்கு சில போக்குவரத்து கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

* கனரக வாகனங்கள் திருப்போரூர் வழியாக வருவதற்கு பதிலாக, செங்கல்பட்டு வழியாக வர வேண்டும்.
* கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள், ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக வர வேண்டும்.
* இதேபோன்று சென்னை வரும் கனரக வாகனங்கள், பரனூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜன.20 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை பிற்பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.
* போக்குவரத்தை விரைவுபடுத்த ஜிஎஸ்டி சாலையில் ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.
* பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+