3 முறை ரயில் குலுங்கியது.. ஏசி நின்றது.. வெளியே கும்மிருட்டு.. ரயில் விபத்து குறித்து பயணி பேட்டி
சென்னை: ரயில் விபத்து ஏற்பட்ட போது எங்கள் பெட்டி 3 முறை குலுங்கியது என்றும் ஏசி இயந்திரம் நின்றுவிட்டது என்றும் அந்த ரயிலில் பயணித்து இரு குழந்தைகளுடன் உயிர் பிழைத்தபெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இதுவரை 296 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 1000 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விபத்தில் இருந்து இரு குழந்தைகளுடன் உயிர் தப்பிய பெண் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் ரயில் விபத்து நேரிடும் போது தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது 3 முறை எங்கள் பெட்டி குலுங்கியது. அதிக சப்தம் கேட்டது.
உடனே ஏசி இயந்திரம் நின்றுவிட்டது. ரயிலும் முற்றிலுமாக நின்றுவிட்டது. என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை. வெளியே எட்டி பார்த்தால் பயங்கர இருட்டாக இருந்தது. எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்துதான் ரயில் விபத்து ஏற்பட்டது என்பதையே உணர்ந்தோம்.
ஆனாலும் இத்தனை பயங்கரமான விபத்தாக இருக்கும் என்பதை நாங்கள் அறியவில்லை என அந்த பெண் உருக்கமாக தெரிவித்தார். இந்த விபத்து சம்பவத்தை அந்த பெண் விவரிக்கும் போது மிகவும் பதற்றத்துடனே காணப்பட்டார். இந்த விபத்தில் சிக்கி எந்தவித காயமும் ஏற்படாதவர்களை அவரவர் செல்லும் இடத்தில் சேர்க்கும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து வருகின்றன.
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் இந்த விபத்துக்கான காரணம் தெரிந்துவிட்டது. நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடங்களை பார்வையிட்டார். இன்று ரயில் தண்டவாளங்களை மீண்டும் பழையபடி கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன.
புதன்கிழமை காலைக்குள் அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் முடித்துவிட வேண்டும். அப்போதுதான் அந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயங்க முடியும் என தெரிவித்துள்ளார். நிறைய பேரின் இதயங்கள் வெளியே வந்துவிட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications