சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே.. திடீரென ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் பரிதவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே திடீரென புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை இயங்காததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை போன்ற பெருநகரங்களில் பயணிகள் அதிகம் நம்பியிருப்பது புறநகர் ரயில்களைத்தான். அதிலும் சென்னையில் சாலை வழியில் பயணம் செய்தால் அலுவலகத்திற்கோ.. எங்காவது போக வேண்டிய இடத்திற்கும் சரியான நேரத்தில் சென்று விட்டால் பெரும் சாதனையாகத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு டிராபிக் இருக்கும்.

அதிலும் பீக் நேரங்களில் சொல்லவே வேண்டாம். எந்த சாலையில் பார்த்தாலும் பைக்குகளும் கார்களும் பேருந்துகளும் என சாலைகளில் சாரை சாரையாக அணி வகுத்து செல்வதை காண முடியும். கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கும் வாகனங்கள் தான் தெரியும். கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.
இதனால், சென்னையில் புறநகர் ரயிலிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருக்கும். துல்லியமான நேரத்தில் இலக்கை சென்றடையும் என்பதால் பயணிகள் ரயில் பயணத்தை விரும்ப இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் - ஆவடி உள்ளிட்ட வழித்தடங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இப்படி பீக் நேரங்களில் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து, சிக்னல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கோளாறு நீடிப்பதால் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால், ரயில் நிலையங்களில் பயணிகள் தவித்து வருகின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. சிக்னல் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கோளாறு சீர் செய்யப்பட்டு ரயில் சேவை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பட்டாபிராமில் புதுப்பெண் சந்தியா.. கல்யாணமான ஒரே மாதத்தில் கணவன் வீட்டிற்கு போன போது இப்படியா ஆகணும் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications