படிக்கும் காலத்திலேயே மாணவர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற பயிற்சி! அமைச்சர் தாமோ அன்பரசன் புது தகவல்!
சென்னை: படிக்கும் காலத்திலேயே மாணவர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுமை நிறைந்த தொழிலில் ஈடுபடுபவர்களை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மூலம், ஆதார நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியதாவது;

படிக்கும் காலத்தில்
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, மாணவர்களை, புதிய கண்டுபிடிப்பாளர்களாக தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில், தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 794 இளைஞர்களுக்கும், ஊரக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், தாட்கோ போன்ற அரசு துறைகளுடன் இணைந்து 7 ஆயிரத்து 259 இளைஞர்களுக்கும், புத்தாக்க தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும், 97 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள Incubation Centres மூலம் 68 ஆயிரம் மாணவர்களுக்கு என 3 லட்சத்து 27 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுமை நிறைந்த தொழில்
புதுமை நிறைந்த தொழிலில் ஈடுபடுபவர்கள், தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்கள்ஆகியோரை ஊக்கப்படுத்துவதற்கு, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மூலம், ஆதார நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான புத்தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
இதில், பசுமை தொழில்நுட்பம், பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு ஆகிய தொழில்களுக்கு மானியத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி, 25 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி உதவியை முதல்வர் வழங்கினார்.

புத்தொழில் முனைவோர்
புத்தொழில் முனைவோர்களையும் அவர்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கும் தொழில் இணைக்கும், Mentor-TN என்ற வழிகாட்டி மென்பொருள் இணையதளம் மாண்புமிகு முதல்வரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. இவைகள் மட்டுமல்ல, உள்ளுர் திறமைகளை வளர்த்தெடுக்க, 20 குறும் குழுமங்கள், 5 பெரும் குழுமங்கள், புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள், பொது உற்பத்தி நிலையங்கள், பொது வசதி கட்டிடங்கள், தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், என எண்ணற்ற
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications