சென்னை மக்கள் கவனத்திற்கு.. நாளை மதியம் 3 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் பெரும்பாலானோர் புறநகர் ரயில்களை தங்கள் அன்றாட பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அலுவலகங்கள், வேலைக்குச் செல்ல, பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல என லட்சக்கணக்கானோர் நாள்தோறும் புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதிக்கு ஏற்ப, அதிகளவில் ரயில்களை இயக்கி வருகிறது.

Trains between Chennai Beach and Tambaram will be cancelled tomorrow


பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவ்வப்போது சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்கள் என்பதால், இந்த ரயில் சேவை ரத்து காரணமாக வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+