வடசென்னை மக்களே கவனம்.. சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ரத்து
சென்னை: வடசென்னை மக்களை பெருநகர சென்னையுடன் இணைப்பதில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில், இன்று சென்ட்ரலிலிருந்தும், சென்னை கடற்கரையிலிருந்தும் கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் வடசென்னை மக்கள் வேறு போக்குவரத்து வசதிகளை அணுகவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எண்ணூர், எர்ணாவூர், தாழங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் திருவொற்றியூர் விம்கோவுக்கு வந்துவிட்டால் போதும். அங்கிருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மின்சார ரயில்கள் ரத்து குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், "கவரைப்பேட்டை - பொன்னேரி இடையே இன்றும், நாளை மறுநாளும் (மார்ச் 1) காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, சென்னை சென்ட்ரலிலிருந்து காலை
8.05
8.35
9
9.30
10.15
10.30
11.35
ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
மறுமார்க்கமாக கும்மிடிபூண்டியில் இருந்து காலை
9.55
10.55
11.25
12
1
2.30-க்கு
புறப்படும் ரயில்களும், சூலூர்பேட்டையிலிருந்து முற்பகல் 11.45, பிற்பகல் 1.15-க்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படும். மட்டுமல்லாது செங்கல்பட்டிலிருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிபூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.40, 11.35-க்கும், மறுமார்க்கமாக பொன்னேரியில் இருந்து காலை 10.13, 11.13, பகல் 12.18, பிற்பகல் 2.48, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
பொன்னேரி-சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.13-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு பிற்பகல் 12.40-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். தவிர, சென்னை சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 9.30-க்கும், எண்ணூருக்கு காலை 10.30-க்கும், மறுமார்க்கமாக மீஞ்சூரிலிருந்து காலை 11.56-க்கும், எண்ணூரிலிருந்து பிற்பகல் 1.43-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications