Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோலார்பேட்டை வழியா போறீங்களா? 3 நாளைக்கு ரயில்கள் கிடையாது! ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் விபத்துகளை தடுக்க, தண்டவாளம், சிக்னல் உள்ளிட்டவை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,200 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ரயில் தடங்கள் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக அளவு ரயில்கள் இயக்கப்படுவதுதான் ரயில் விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக சொல்லப்படுகிறது.

Trains running through Jolarpet will be canceled for three days due to maintenance work

எனவே தண்டவாளத்தின் தரம், சிக்னல் செக்கிங் என ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஈரோட்டிலிருந்து அதிகாலை 6.25 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06412) மற்றும் மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையிலுருந்து பிற்பகல் 3.10 மணிக்கு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06411) ஜூன் 24,26,28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல பெங்களூரிலிருந்து காலை 8.45 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06551) மற்றும் மறு மார்க்கமாக ஜோலார்பேட்டையிலுருந்து பிற்பகல் 2 மணிக்கு பெங்களூரு செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 06552) ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சாந்த்ராகாச்சியிலிருந்து ஜூன் 23 இரவு 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் குளிர்சாதன அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22807) மற்றும் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஜூன் 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு சாந்த்ராகாச்சி செல்லும் ரயில் (வண்டி எண்: 22808) முழுமையாக ரத்து செய்யப்பட்டுகிறது.

மேற்குவங்கத்தின் ஹவுராவிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 23) மாலை 4.15 மணிக்கு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மைசூரு செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22817) மற்றும் மறு மார்க்கமாக மைசூரிலிருந்து ஜூன் 25 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு ஹவுரா செல்லும் ரயில் (வண்டி எண்: 22818) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது" என கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+