டி.ஆர்.பி.ராஜா நினைத்தால் அவரே இதை செய்யலாமே! சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்!
சென்னை: டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நினைத்தால் அவரே மன்னார்குடியில் புதிதாக விவசாயக் கல்லூரியை தொடங்கலாமே என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
புதிய விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும் என்பதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் கூறினார்.
இதேபோல் புதிய வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் தங்களை பொறுத்தவரை நிலம் தான் ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

சட்டசபையில் கேள்வி
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, தனது தொகுதியில் புதிய விவசாயக் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாமே எனக் கூறியதுடன் அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அரசுக்கு நற்பெயர்
மேலும், விவசாயிகள் மத்தியில் தமிழக அரசுக்கு மிகப்பெரிய நற்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாகவும் கூறினார். புதிய விவசாயக் கல்லூரி அமைக்கக்கூடாது என்பது அரசின் நோக்கமல்ல என்றும் நிலம் தான் பிரச்சனையாக இருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

110 ஏக்கர் நிலம்
ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும் என்றும் அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கம் 600 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

நம்மாழ்வார் பெயரில்
இதனிடையே தமிழக அரசு சார்பில் புதிய விவசாயக் கல்லூரி அமைக்கப்பட்டால் அதற்கு நம்மாழ்வார் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகத்தை டெல்டா பகுதியில் அமைக்கவேண்டும் எனவும் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை விடுத்தார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications