‘சிவப்பு நைட்டி’.. மீண்டும் சேட்டையை ஆரம்பித்த திருச்சி சாதனா! அப்ப மொதல்ல சொன்னது பொய்யா கோபால்..?
சென்னை : இனி இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாக பேசவோ, ஆடவோ மாட்டேன் என மன்னிப்பு வீடியோ வெளியிட்ட திருச்சி சாதனா, தற்போது மீண்டும் பல்வேறு ஆண்களுடனும் நடனமாடி, நைட்டியில் ஆபாசமான அசைவுகளுடன் வீடியோ வெளியிட்டு வருவதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டதோடு, ஃபேஸ்புக் லைவ்வில் அரைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக பேசி தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்தார்.

திருச்சி சாதனா
அதிலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி சாதனா ஆபாசமாக பேசிய யூட்யூப்பில் வெளியிட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றது. இந்த நிலையில் நச்சலூர் கிராம மக்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பினர்.அதில் தங்கள் கிராமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாச வீடியோக்களை வெளியிடும் சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மன்னிப்பு வீடியோ
இதனையடுத்து திருச்சி சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், விசாரணை நடத்தி தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். உடனே 'நான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட மாட்டேன்' என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்த சாதனா, அதையே பேசி ஒரு வீடியோவாகவும் வெளியிட்டார். ஒரு சில நாட்கள் அமைதியாக இருந்த அவர் மீண்டும் சேலை கட்டி டீசண்டாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
மீண்டும் சேட்டை
இந்நிலையில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக இன்ஸ்டாகிராமில் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளார் திருச்சி சாதனா. 80'ஸ் காலகட்டங்களில் வெளியான இரட்டை அர்த்த வசனம் உள்ள பாடல்களுக்கு நைட்டியுடன் ஆபாச நடன அசைவுகளுடன் நடனம் ஆடுவது என மீண்டும் சேட்டையை துவக்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணுடன் டூயட் என்ற பெயரில் அட்ராசிட்டி செய்துவரும் திருச்சி சாதனாவின் கமெண்ட் செக்சனில் கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வலுக்கும் கண்டனம்
லைவ் வீடியோக்களில் வரும் கமெண்டுகளுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து கெட்ட வார்த்தைகளில் பேசிய சாதனா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் எப்படி குளிக்க வேண்டும் என சில ஆடைகளுடன் குளிக்கும் வீடியோவை போட்டு சர்ச்சையில் சிக்கினார். கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த திருச்சி சாதனா தற்போது, இன்ஸ்டாகிராமில் சேட்டையை ஆரம்பித்து வரும் நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications