அப்ப நீங்களும் அந்த கம்பெனியில் இருந்து பணம் வாங்கினீர்களா?.. கனிமொழிக்கு திருச்சி சூர்யா கேள்வி
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்காக பிரச்சாரம் செய்தபோது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் துப்பாக்கிச் சூட்டை பற்றி மட்டும் எந்த இடத்திலும் பரப்புரை செய்ய வேண்டாம் என்று நீங்கள் என்னிடம் கூறியது ஏன் என திருச்சி சூர்யா கனிமொழி எம்பியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
எண்ணித் துணிக நிகழ்ச்சியில் "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (FCR Act), பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் மாநிலத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து சில மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகையில், "வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடையாக பெறுகிறது. அது ஒருமுறை என்றால் பிரச்சனை இல்லை. தொடர்ந்து அத்தகைய நன்கொடை வருமானால், அங்கு எஃப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வரும்.

கூடங்குளம்
இந்த சட்டம் மூலம் அனைத்து வெளிநாட்டு நன்கொடை வரவும் உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும். இப்படி வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக தென் மாவட்டத்தில் அணுஉலை திட்டத்துக்கான வேலை தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்ற தாக்கம், வெடிப்பு, மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தன. யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது.
விழிஞ்சம் துறைமுகம்
வடகிழக்கு மாநிலங்களில் சிலர் போலி நிறுவனங்களை வெளிநாடுகளில் ஆரம்பித்து ரூ. 200 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி பெற்று இந்தியாவில் மதமாற்றத்துக்காக பயன்படுத்தினர். இதுபோன்ற தேச நலனை பாதிக்கும் விவகாரங்களில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. கேரளாவின் விழிஞ்சம் துறைமுக திட்டம் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற மிகப்பெரிய மனித உரிமை அமைப்பின் இடையூறால் ஓராண்டுக்கும் மேல் தடைபட்டது. பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், அரசு அனைத்தும் திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லியும் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்த ஆம்னெஸ்டி அமைப்பு குறித்து விசாரணை நடத்தியபோது அதற்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்துள்ளது. துரதிருஷ்டவசமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது கவலைக்குரிய விஷயம். இந்திய தேவையில் 40% தாமிரத்தை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்தது. அது மூடப்பட்டதால் இந்தியாவின் தாமிர தேவை பாதிக்கப்பட்டது. இந்தியாவின் மின்னணு உற்பத்திக்கு முக்கிய தேவை தாமிரம். அதன் உற்பத்தியை முடக்கும் பின்னணியில் இருந்தவர்கள் அந்நிய நிதியை பெற்றது தெரியவந்துள்ளது" என ஆளுநர் ரவி கூறினார்.
கனிமொழி எம்பி கேள்வி
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்பி திருச்சி சிவா, அதிமுகவில் இருந்து கேபி முனுசாமி உள்பட பலரும் ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கனிமொழி எம்பி கூறும் போது, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பேசியதற்கு ஆதாரங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தரவேண்டும்; மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
திருச்சி சூர்யா பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "ஆட்சியை கையில் வைத்திருக்கும் நீங்கள்,ஆளுநர் ஏன் ஆதாரங்கள் தர வேண்டும். தங்களுக்காக திமுகவில் அப்பொழுது பயணித்த நான் பாராளுமன்றத் தேர்தலில் உங்களுக்காக பிரச்சாரம் செய்தபோது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் துப்பாக்கிச் சூட்டை பற்றி மட்டும் எந்த இடத்திலும் பரப்புரை செய்ய வேண்டாம் என்று தாங்கள் எனக்கு கட்டளையிட்டதற்கான காரணம் என்ன? நீங்களும் அந்த கம்பெனியில் இருந்து பணம் வாங்கினீர்களா? அதிமுகவின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை ஏன் பரப்புரையில் கூற வேண்டாம் என்று கூறினீர்கள்.. அதற்கு உண்டான பதிலை கூறவும்" என்று கூறியுள்ளார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications