Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஆக்கப்பூர்வ பணிகள் எவ்வளவோ இருக்கும்போது,இது தேவையா?' தமிழ்நாடு நாள் சர்ச்சை..டிடிவி தினகரன் சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நாள் குறித்த முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு தேவையற்றது என்று விமர்சித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆக்கப்பூர்வமாகச் செய்யவேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது, இத்தகைய பொருத்தமற்ற நடவடிக்கைகளை தி.மு.க அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார்

கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணம் அப்போது தான் பிரிக்கப்பட்டது. ஆந்திரா என்ற புதிய மாநிலமும் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு நாள்

தமிழ்நாடு நாள்

தங்களுக்கென தனி மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வதையில் கர்நாடகா, கேரளா மாநில மக்கள் நவம்பர் 1ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் கடந்த நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் எனக் கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பைச் சிலர் எதிர்த்திருந்தனர்.

மெட்ராஸ் மாகாணம்

மெட்ராஸ் மாகாணம்

அதாவது ஒருங்கிணைந்த மாநிலம் பிரிக்கப்பட்ட தினத்தைத் தமிழ்நாடு தினமாக கொண்டலாக்கக் கூடாது என்று தெரிவித்த அவர்கள், ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏனென்றால் ஆங்கிலேய ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் என்றே தமிழ்நாடு அழைக்கப்பட்டு வந்தது. மெட்ராஸ் மாகாணத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்,

தமிழ்நாடு பெயர்மாற்றம்

தமிழ்நாடு பெயர்மாற்றம்

இதற்காக 1956இல் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகமும் செய்தார். இதையடுத்து 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என மாற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1967 ஜூலை 18ஆம் தேதி நிறைவேறியது. இதனைக் கொண்டாடும் வகையில் ஜூலை 18ஐ தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

முதல்வர் அறிவிப்பு

முதல்வர் அறிவிப்பு

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது இனி ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். மேலும், நவம்பர் 1ஆம் தேதி எல்லைக்காகப் போராடிய தியாகிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக அரசு இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார். அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸும், பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல என்றும் நவம்பர் 1 ஆம் நாள் தான் தமிழ்நாடு நாள் என்று வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி சாடல்

டிடிவி சாடல்

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தமிழ்நாடு நாள் குறித்த முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு தேவையற்றது; திரும்பப் பெற வேண்டியது. ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது, இத்தகைய பொருத்தமற்ற நடவடிக்கைகளை தி.மு.க அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் நலப் பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+