அமமுக கட்சி "முதல்வர் வேட்பாளர்" டிடிவி தினகரன்.. நிறைவேறிய அதிரடி தீர்மானம்.. அமைகிறதா 3வது அணி?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பிற நிர்வாகிகள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

சசிகலா விருப்பம்
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா சென்னை வீடு திரும்பிய நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஒருங்கிணைந்து பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்மூலம், அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதற்கு சசிகலா விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதிமுக தரப்பிலிருந்து, சசிகலாவை ஏற்றுக்கொள்வதில்லை என்று பல தலைவர்களும் தெரிவித்துவிட்டனர்.

மூன்றாவது அணி
இந்தநிலையில்தான், இன்னொரு பக்கம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி மூலமாக மூன்றாவது அணி அமைக்க முயற்சிகள் நடக்கின்றன.
சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொண்டால் அந்தப் பக்கமாக போவது, அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மூலமாக கூட்டணி அமைத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது அரசியல் வியூகமாக இருக்கிறது.

அமமுக பொதுக்குழு கூட்டம்
இந்த நிலையில்தான் சென்னையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, சசிகலா நல்லாசியுடன் டிடிவி தினகரனை முதல்வராக அயராது பாடுபட வேண்டும் என்று அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது அணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில்தான் அமையப்போகிறது, தினகரன்தான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது. அப்படியானால் சீமானை முதல்வர் வேட்பாளர் கொண்ட, நாம் தமிழர் எப்படி இந்த கூட்டணியில் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினகரனுக்கு பாராட்டு
மற்றொரு தீர்மானத்தில், எல்லா சவால்களையும் எதிர்கொண்டு கழகத்தை சிறப்பாக நடத்திவரும் டிடிவி தினகரனுக்கு பாராட்டை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

குக்கர் சின்னம்
டிடிவி டிடிவி தினகரன் தலைமையில் அம்மாவின் உண்மை தொண்டனாக பயணிப்பது என்று ஒரு தீர்மானம் கூறுகிறது. கழகம் காக்கும் போராளியாக, துணிச்சலுடன் எதிர்கொண்டு மக்கள் இதயங்களில் இடம் பிடித்தவர் டிடிவி தினகரன் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னத்தை பெற்று, அத்தனை சவால்களையும் எதிர்கொள்ள டிடிவி தினகரன் தயாராக இருப்பதாகவும் இந்த கூட்டம் புகழ்ந்துரைத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications