டிடிவி தினகரன் கோவில்பட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு.,. மாலை முரசு அதிரடி கணிப்பு
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக மாலைமுரசு வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த கட்சி, எந்த தொகுதியில் வெற்றி பெறும் என்பது குறித்து மாலை முரசு தொலைக்காட்சி கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்டு வருகிறது.
நேற்றும் இன்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 52 தொகுதிகளுக்கு நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டது.

திமுக 34
அந்த கணிப்பில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெல்லும் என்றும், அதிமுக கூட்டணி 11 இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளது. அமமுக ஒரு இடத்தில் வெல்லும் என்றும் திமுக அதிமுக இடையே ஆறு இடங்களில் இழுபறி நீடிக்கும் என்றும் மாலை முரசு தொலைக்காட்சி கணிப்பில் கூறியுள்ளது.

ஆறு இடங்கள் இழுபறி
அதிமுக, திமுக இரண்டுக்குமே சவால் உள்ள தொகுதிகள் ஒரு புறம் என்றால், இந்த இரண்டு கூட்டணிகளுமே , வெல்ல வாய்ப்பு இல்லை என்றும் அமமுகவின் டிடிவி தினகரன் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கோவில்பட்டி தொகுதி குறித்து மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.

முமமுனைப்போட்டி
அங்கு அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டிடுயிகிறார். அதிமுக சார்பில் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் போட்டியிடுகிறார். மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது

அமமுக வெல்லும்
இந்நிலையில் மாலைமுரசு நடத்திய கருத்துக்கணிப்பில் கோவில்பட்டியில் அமமுகவின் டிடிவி தினகரனுக்கு 34 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு 29 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனுக்கு 24 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 4 சதவீதமும், மநீமவிற்கு 3 சதவீதமும் நோட்டாவிற்கு 2 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications