அமமுகவில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு; விஜயகாந்தை நாளை சந்திக்கிறார் டி.டி.வி தினகரன்!
சென்னை: அமமுகவில் வாசுதேவநல்லூர், கீழ்வேளூர் தொகுதிகளில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அமமுகவும் வலிமையான கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த தேமுதிக, அமமுக கூட்டணியில் உள்ளது.

இதுபோக அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சி, எஸ்டிபிஐ கட்சி அமமுக கூட்டணியில் உள்ளது. இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.
அமமுகவில் 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலும், 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும், 130 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலும், அடுத்ததாக 7 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அமமுக சார்பில் வாசுதேவநல்லூர், கீழ்வேளூர் தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்வேளூர்(தனி) எம்.நீதிமோகன், வாசுதேவநல்லூரில் தங்கராஜ் ஆகியோர் போட்டியிட உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications