Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்.16-ம் தேதி விடுதலையாகிறார் சுதாகரன்... ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது சிறைவாசம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுதாகரன் நாளை மறுநாள் விடுதலையாகிறார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி சசிகலாவும், இளவரசியும் தங்களது தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

அபராதம்

அபராதம்

அவர்களுடன் சிறை தண்டனை அனுபவித்த சுதாகரனுக்கு தண்டனைக் காலத்துடன் சேர்த்து ரூ.10 கோடியே ரூ.10,000 அபராத தொகையாக விதிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை சுதாகரனால் செலுத்த முடியாத காரணத்தால், கடந்த பிப்ரவரி மாதம் அவரால் விடுதலையாக முடியவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதலாக ஓராண்டு தண்டனை அனுபவிக்க நேரிட்டது.

தண்டனைக் காலம்

தண்டனைக் காலம்

இதனிடையே ஏற்கனவே பாளையங்கோட்டை சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தை சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி, கூடுதலாக விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனை காலத்தை சுதாகரனுக்கு குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுதாகரன் அனுபவித்து வரும் கூடுதலான ஓராண்டு தண்டனைக் காலத்தில் 89 நாட்களை குறைத்துள்ளது.

அக்கா மகன்

அக்கா மகன்

அதன்படி அக்டோபர் 16-ம் தேதி, அதாவது நாளை மறுதினம் அவர் விடுதலை செய்யப்படவுள்ளார். இது குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் சொந்த அக்கா மகன் தான் சுதாகரன் என்பதும் இவர் டிடிவி தினகரனுக்கு உடன் பிறந்த தம்பி என்பதும் கவனிக்கத்தக்கது.

சிவாஜி குடும்பம்

சிவாஜி குடும்பம்

நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தில் பெண் எடுத்துள்ள சுதாகரனுக்கு, தன் வீட்டு தரப்பிலும் சரி மாமனார் வீட்டு தரப்பிலும் சரி யாரும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த முன் வரவில்லை. சுதாகரன் மீது பரிதாபப்பட்டு முன் கூட்டியே அபராதம் செலுத்தப்பட்டிருந்தால், இவரும் கடந்த பிப்ரவரி மாதமே விடுதலையாகி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைவாசத்துக்கு பிறகு சுதாகரன் முழுக்க முழுக்க ஆன்மிக பணிகளில் மட்டுமே நாட்டம் செலுத்துவார் என்றும் அரசியல் பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+