தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா? வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் தலைநகரான டெல்லியில், நேற்று விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது ஊடகங்களின் வாயிலாக நாம் அறிந்து கொண்டோம்.

இந்த நிலையில், திருவாரூரில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள், திமுகவின் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கும் அதிமுக அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, பேரணியில் ஈடுபட்டவர்களெல்லாம் பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து, அவர்களை நடு இரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்து சென்று கைது செய்ய காவல்துறை முயன்றுள்ளது. காவல்துறையின் இந்த அராஜக போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், நானும் விவசாயி, விவசாயிகளின் நண்பன் என ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமியின், உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
பாசிச மோடி அரசின் அடிமையாக இருந்து வரும் எடப்பாடி அரசுக்கு, இந்நேரத்தில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். அதாவது, பல்வேறு நிலைகளில், காலக்கட்டங்களில் அதிமுக அரசின் உண்மை முகத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டனர்.
எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசுக்கும், போலி விவசாயான எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications