சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். 37 குடும்பங்களை மாம்மல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வந்து விஜய் தனித்தனியாக ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தொழில், சொந்த வீடு, கடன் பிரச்சனை, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட விவரங்களையும், உதவி கோரிக்கைகளையும் விஜய் எழுத்துப்பூர்வமாகயும் பெற்று வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில் அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை.
Oct 27, 2025, 1:36 pm IST
மன்னிப்பு கேட்ட விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய், உங்களின் குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி, வேதனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்போதும் தானும், சுட்சியும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Oct 27, 2025, 11:58 am IST
உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு உட்பட அனைத்து உதவிகளையும் தவெக செய்து தரும் என தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Oct 27, 2025, 11:53 am IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த மோகன் என்பவரின் தந்தை கந்தசாமி தனியாக மாமல்லபுரம் சென்றுள்ளார். அவரை ரிசார்ட்டுக்குள் அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாசலில் சிறிது நேரம் காத்திருந்த அவர் பின்னர், கையுடன் எடுத்து வந்த மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு தவெகவினர் அவரை உள்ளே செல்ல அனுமதித்து அழைத்து சென்றனர்.
Oct 27, 2025, 11:53 am IST
ஒவ்வோர் அறைக்கும் செல்லும் விஜய், அந்த அறையில் வைக்கப்பட்ட. உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசி வருகிறார்.
Oct 27, 2025, 11:53 am IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை விஜய் இன்று தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உள்ளார்.
Oct 27, 2025, 11:37 am IST
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து ஆறுதல் கூறும் நிகழ்வில் தனது கையால் தேநீர் வழங்கி உபசரித்தார் தவெக தலைவர் விஜய்.
Oct 27, 2025, 11:36 am IST
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கல்விச் செலவு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கின்றனர்.
Oct 27, 2025, 11:36 am IST
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கையை த.வெ.க. தலைவர் விஜய் எழுத்துப்பூர்வமாக பெற்றுள்ளார்.
Oct 27, 2025, 11:36 am IST
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
Oct 27, 2025, 11:36 am IST
மாமல்லபுரத்தில்
சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர்.
11:36 AM, 27 Oct
மாமல்லபுரத்தில்
சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர்.
11:36 AM, 27 Oct
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
11:36 AM, 27 Oct
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கையை த.வெ.க. தலைவர் விஜய் எழுத்துப்பூர்வமாக பெற்றுள்ளார்.
11:36 AM, 27 Oct
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கல்விச் செலவு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கின்றனர்.
11:37 AM, 27 Oct
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து ஆறுதல் கூறும் நிகழ்வில் தனது கையால் தேநீர் வழங்கி உபசரித்தார் தவெக தலைவர் விஜய்.
11:53 AM, 27 Oct
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை விஜய் இன்று தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உள்ளார்.
11:53 AM, 27 Oct
ஒவ்வோர் அறைக்கும் செல்லும் விஜய், அந்த அறையில் வைக்கப்பட்ட. உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசி வருகிறார்.
11:53 AM, 27 Oct
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த மோகன் என்பவரின் தந்தை கந்தசாமி தனியாக மாமல்லபுரம் சென்றுள்ளார். அவரை ரிசார்ட்டுக்குள் அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாசலில் சிறிது நேரம் காத்திருந்த அவர் பின்னர், கையுடன் எடுத்து வந்த மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு தவெகவினர் அவரை உள்ளே செல்ல அனுமதித்து அழைத்து சென்றனர்.
11:58 AM, 27 Oct
உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு உட்பட அனைத்து உதவிகளையும் தவெக செய்து தரும் என தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1:36 PM, 27 Oct
மன்னிப்பு கேட்ட விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய், உங்களின் குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி, வேதனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், எப்போதும் தானும், சுட்சியும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார்.
அதன்படி, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், தவெக சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. ஆனால், விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மண்டபம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
TVK Vijay Meeting Karur Victims Families LIVE News in Tamil: Check out the LIVE news updates as Actor and TVK Chief Vijay meets the families of Karur stampede victims in Chennai, marking one month since the tragic incident. The meeting was held at a private hotel in Mahabalipuram.