பிப்ரவரி 8ல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்.. வேலூரில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!
சென்னை: பிப்ரவரி 8ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அகரம்சேரியில் பிரம்மாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டு, காவல்துறை மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக மைதானத்தை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தவெக தொண்டர்கள் ஆர்வம் காட்டி வந்தாலும், தவெக தலைவர் விஜய் இன்னும் வீட்டில் இருந்தவாறே அரசியல் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக ஈரோடு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பின் விஜய் மக்களை எங்கும் சந்திக்கவே இல்லை.

கிறிஸ்துமஸ் விழா மற்றும் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் மட்டுமே விஜய் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே தவெக எதிர்பார்த்ததை போல் காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணையவில்லை. இதனை தவெக செயல் வீரர்கள் கூட்டத்திலேயே விஜய்யும் சூசகமாக அறிவித்துவிட்டார். இதனால் தேர்தலில் செலவு செய்வதற்கு தவெகவினர் பலரும் தயக்கம் காட்ட தொடங்கியுள்ளனர்.
இதனால் விஜய் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தவெகவின் 3வது ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடக்கவுள்ளது. இதன்பின் விஜய் உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பிப்ரவரி 8ஆம் தேதி வேலூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது. வேலூர் அருகே அகரம்சேரியில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் தவெக பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.
தற்போது இந்த மைதானத்தில் காவல்துறை மேற்பார்வையில் 7 ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விஜய் இனி ஒவ்வொரு வாரமும் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே சேலம் மாவட்டத்திலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இனி விஜய் ஒவ்வொரு மாவட்டமாக பயணிப்பார் என்று அக்கட்சியினர் கூறத் தொடங்கியுள்ளனர். தவெகவுக்கு 15 சதவிகிதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்று அண்மையில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது விஜய் பிரச்சாரம் மேற்கொண்டால், இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம்












Click it and Unblock the Notifications