அரசியல் களத்தில் அனல் ஏற்றும் விஜய்… சென்னையில் 3 தொகுதிகளில் இன்று அதிரடி பிரசாரம்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்குப்பதிவு தேதி நெருங்கி வருவதால், தலைவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து ஆதரவை பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று சென்னையில் 3 இடங்களில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை தியாகராயநகரில் த.வெ.க. வேட்பாளராகப் போட்டியிடும் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை ஆதரித்து தவெக தலைவர் விஜய் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
அதைத் தாண்டி யாரும் வரக்கூடாது.. திருப்பூர் கூட்டத்தில் திடீரென டென்ஷனான விஜய் -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
விஜய்க்கு ஓட்டு போடனும்.. முதியவர் சொல்லியும் காங்கிரஸ்க்கு குத்திய அதிகாரிகள்? காரைக்குடியில் மறியல் -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
விஜய் அவரது குழந்தையை கைவிடமாட்டார்.. திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க ஆதவ் அர்ஜுனா ஐடியா -
கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
தொண்டர்கள் கையை மிதிக்கும் பவுன்சர்கள்.. உணர்ச்சிவசப்பட்டுட்டாங்ளாம்! புது விளக்கம் கொடுத்த சிடிஆர்! -
விஜய் என்கிட்ட கேட்ட கேள்வி.. நான் எதிர்பார்க்கல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! ஓபனாக பேசிய ராதாரவி












Click it and Unblock the Notifications