இனி ‘கடைசி’ பெஞ்ச் கிடையாது.. தமிழக பள்ளிகளிலும் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்க அரசு உத்தரவு!
சென்னை: கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களை 'ப' வடிவில் இருக்கைகள் அமைத்து அமர வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
'ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற ஒரு மலையாள திரைப்படத்தால் கேரள பள்ளிகளில் வகுப்பறைகளே அடியோடு மாறியுள்ள நிலையில், அது தற்போது தமிழ்நாடு வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த இருக்கை வரிசைகளில் முன் வரிசைகளில் அமரும் மாணவர்கள் படிப்பாளிகள் எனக் கருதும் வழக்கம் இருக்கிறது. கடைசி பெஞ்ச்களில் இருப்பவர்கள் சேட்டை செய்பவர்கள் என்பது பொதுப் புத்தியில் பதிந்த ஒன்று. இந்நிலையில் இந்த பாகுபாட்டால் மாணவர்களிடையே ஏற்படும் அழுத்தத்தை மாற்றும்படி வந்துள்ளது ஒரு திரைப்படம்.
ஓடிடி தளத்தில் வெளியான மலையாளத் திரைப்படம்'ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்' (Sthanarthi Sreekuttan). இந்தப் படம், பள்ளி இருக்கையில் முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் என்ற பிரிவினை உளவியல் ரீதியான குழந்தைகளுக்கு சுமையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தத் திரைப்படத்தின் தாக்கத்தால் கேரளாவின் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக இல்லாமல், அரை வட்ட, வடிவமாக மாற்றப்பட்டுள்ளன. இது பள்ளி மாணவர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, கேரளாவின் பெரும்பாலான பள்ளிகளிலும் இதுபோல மாற்றப்பட்டுள்ளது.
கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது கிடையாது. மாணவர்களை 'ப' வடிவில் அமர வைப்பதன் மூலமாக கல்வியில், கவனத்தில் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் ஒருவரையொருவர் பார்க்க, ஆசிரியரைக் கவனிக்க வசதியாக இருக்கும்.
கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்கக்கூடாது எனவும், இந்த வடிவில் அனைவரும் அமரும் போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் பள்ளி கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications