என்னை ‘சின்னவர்’ என்று அழைக்க இது தான் காரணம்! சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
சென்னை: சட்டசபையில் உள்ள தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் உண்மையிலேயே தான் சின்னவன் தான் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Stalin Is More Dangerous Than Kalaignar என்பது தான் முதல்வருக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் தனது உரையை நிறைவு செய்வதற்கு முன் இது தொடர்பாக அவர் பேசியதாவது;

சின்னவர்
இங்குள்ள பலர் என்னை 'சின்னவர்' என்றும் 'சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை' என்றும் அழைப்பதை கேட்கிறேன். இங்குள்ள தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் உண்மையிலேயே நான் சின்னவன் தான். மக்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

அன்பும் ஆலோசனையும்
அதற்கு உங்கள் அனைவரின் அன்பையும் ஆலோசனையும் வழங்குமாறும் வழிகாட்டுமாறும் பேரவைத் தலைவர் உள்ளிட்ட இந்த அவையினரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆட்சிப்பொறுப்பேற்று இந்த ஓராண்டுகளில் தலைவர் அவர்களின் உழைப்பை, மக்கள் பணியைப் பார்த்து எதிர்க்கட்சியினரும் பாராட்டுகின்றனர்.

சிறந்த பாராட்டு
Stalin Is More Dangerous Than Kalaignar. இதுதான் மாண்புமிகு நம் முதல்வருக்கு, தலைவர் அவர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு. இத்துறை மீதான விவாதத்தில் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு வழங்கிய பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், துறையின் அமைச்சர் அவர்களுக்கும் மீண்டும ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.

ஒற்றைக் குரல்
முன்னதாக திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரது சார்பில் ஒற்றைக் குரலாக சட்டசபையில் ஒலித்து அவர்களது கோரிக்கைகளையும், பிரச்சனைகளையும் நீண்ட நெடிய நேரம் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.












Click it and Unblock the Notifications