பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
சென்னை: டிட்வா புயல் சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீட்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரவு 11 மணியளவில் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மழை பெய்யும் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். சமூக வலைதளங்கள் மூலம் புகார்கள், தொலைபேசி மூலம் வரும் புகார்களையும் ஆய்வு செய்துள்ளோம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், "பொதுமக்கள் நாளை வெளியே வர வேண்டாம். டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் துரிதமாக எடுத்துள்ளார். பொதுமக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். 13 நிவாரண மையங்களில் 1,058 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேருக்கு தலா 5 கிலோ அரிசி தயார் நிலையில் உள்ளது" என்று கூறியிருந்தார்.
புயல் காரணமாக நாளை சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட இருந்த 47 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து தமிழ்நாட்டை நோக்கி, மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த டிட்வா புயல், தற்போது வேகம் குறைந்து மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது. இரவு 11 மணி நிலவரப்படி சென்னைக்கு 280 கி.மீ தூரத்திலும், வேதாரண்யத்தில் இருந்து 80 கி.மீ தூரத்திலும் புயல் நிலை கொண்டுள்ளது.
புயல் காரணமாக இரவு முதல் சென்னையில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், டிச.1ம் தேதி முதல் மழையின் தாக்கம் குறைய தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். தற்போது டெல்டா மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பதிவாகியிருக்கிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications