Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிட்வா புயல் சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீட்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரவு 11 மணியளவில் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மழை பெய்யும் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். சமூக வலைதளங்கள் மூலம் புகார்கள், தொலைபேசி மூலம் வரும் புகார்களையும் ஆய்வு செய்துள்ளோம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

AI job jobs Tamil Nadu

முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், "பொதுமக்கள் நாளை வெளியே வர வேண்டாம். டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் துரிதமாக எடுத்துள்ளார். பொதுமக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். 13 நிவாரண மையங்களில் 1,058 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேருக்கு தலா 5 கிலோ அரிசி தயார் நிலையில் உள்ளது" என்று கூறியிருந்தார்.

புயல் காரணமாக நாளை சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட இருந்த 47 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து தமிழ்நாட்டை நோக்கி, மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த டிட்வா புயல், தற்போது வேகம் குறைந்து மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது. இரவு 11 மணி நிலவரப்படி சென்னைக்கு 280 கி.மீ தூரத்திலும், வேதாரண்யத்தில் இருந்து 80 கி.மீ தூரத்திலும் புயல் நிலை கொண்டுள்ளது.

புயல் காரணமாக இரவு முதல் சென்னையில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், டிச.1ம் தேதி முதல் மழையின் தாக்கம் குறைய தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். தற்போது டெல்டா மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பதிவாகியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+