சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! 3 புதிய மேம்பாலங்களுக்கு அடிக்கல்! 24 மாதங்களில் பணி முடியும்!
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 புதிய மேம்பாலங்களுக்கு அடிக்கல்.
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர் பகுதிகளில் ரூ.369 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்கள் அமைக்கும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.
இந்தப் பாலப் பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும் என்ற உறுதியையும் அவர் அளித்துள்ளார்.
புதிதாக அமைக்கப்படவுள்ள மேம்பாலங்களின் முழு விவரம் வருமாறு;

மேம்பாலங்களின் விவரம்
கோடம்பாக்கம் மண்டலம், வார்டு - 133 மற்றும் வார்டு 141 ல், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி நகர் பிரதான சாலையில் ரூபாய் 131 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 1200 மீ, மொத்த அகலம் - 8.40 மீ, பணியின் காலம் - 24 மாதங்கள், மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 2 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள், தினசரி 40 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

2 லட்சம் பொதுமக்கள்
தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 45 மற்றும் 70 ல் கணேசபுரம் சுரங்க பாதையின் மேல் ரூபாய் 142 கோடி மதிப்பில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் - 678 மீ, பாலத்தின் அகலம் - 15.20 மீ, பணியின் காலம் - 24 மாதங்கள். மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 2 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள், தினசரி 40 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

பாலத்தின் நீளம் -அகலம்
தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு - 41ல், மணலி சாலையில் இரயில்வே சந்திக்கதவு 2 ந-ன் குறுக்கே, ரூபாய் 96.04 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் - 840 மீ, பாலத்தின் அகலம் - 8.4 மீ, பணியின் காலம் - 24 மாதங்கள். மேம்பாலம் பணிகள் முடிவடைந்த பிறகு 1.50 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தினசரி 25 ஆயிரம் வாகனங்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்லும்.

உதயநிதி பேச்சு
முன்னதாக இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தாம் வாக்குறுதி கொடுத்ததாகவும். அதன் அடிப்படையில் இப்போது தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications