திமுக ஆட்சி மலரும் நாளில்... நீட் தேர்வு விலக்கு உறுதி- உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சி மலரும் நாளில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு உறுதியாக விலக்கு கிடைக்கும் என அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், கழகம் ஒருநாளும் அனிதாக்களை மறக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொடுமை
பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் பண்படுத்திய தமிழக மண்ணில், சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தங்கள் கடந்த சில ஆண்டுகளாக முளைவிடத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பாடசாலைகள் வழியாக அநீதிகள் நிகழ்த்தப்படுவதாகவும், இது மிகப்பெரிய கொடுமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுக்கவில்லை
சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தங்களை தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சியாளர்களோ, பூங்கொத்து அளித்து அவற்றை வரவேற்பதாக கூறியுள்ளார். அதற்கு நீட் தேர்வு தொடர்பான வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களே சான்று எனத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு
சமூக நீதிக்கு எதிராக தகுதியற்ற முறையில் நடத்தப்படும் தேர்வு முறையைத் தான் தகுதி தேர்வு என்கிறது அரசு எனவும், இந்த தேர்வு முறையில் அனிதாக்களுக்கும், பிரதீபாக்களுக்கும் ஏது இடம் என உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார். அவர்களால் லட்சங்களை செலவழிக்கவும் முடியாது, ஆண்டுகள் பல காத்திருக்கவும் முடியாது என தெரிவித்துள்ளார்.

உதயநிதி உறுதி
மேலும், ஒன்றை மட்டும் நினைவுப்படுத்த விரும்புவதாகவும், இந்திய துணைக்கண்டத்திற்கே சமூக நீதியை கற்றுக்கொடுத்த சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த திமுகவின் ஆட்சி மலரும் நாளில், நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது உறுதி எனக் கூறியுள்ளார். கழகம் ஒருநாளும் அனிதாக்களை மறக்காது என்றும், ஏனெனில் கழகம் அனிதாக்களுக்காக உருவாக்கப்பட்டது எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications