அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய திடீர் ஆய்வு! ஆன் தி ஸ்பாட்டில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களை சர்ப்ரைஸாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து பேசிய அவர் அங்கிருக்கும் குறைகள், பிரச்சனைகள் பற்றி கேட்டறிந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஆன் தி ஸ்பாட்டிலேயே தனது துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

உதயநிதி ஆய்வு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்கின்ற வீரர் - வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

வீரர்களுடன் கலந்துரையாடல்
நேரு விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை அரங்கினை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடி கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்கள் தேவை குறித்து கேட்டறிந்தார். அதேபோல் உடற்பயிற்சி கூடம், மாணவ-மாணவியர் தங்கும் விடுதி மற்றும் நடைபெற்று வருகின்ற பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கழிவறையில் ஆய்வு
மேலும் கீழ் தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாக பராமரித்திடவும் கேட்டுக்கொண்டார். மேலோட்டமாக ஆய்வு செய்வார் என்று அதிகாரிகள் எதிர்பார்த்த நிலையில் கழிவறை வரை கண்கொத்தி பாம்பாக பார்வையிட்டு குறைகளை சரிசெய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி.

ஆய்வுப் பணி
இதற்கு எந்த விளையாட்டுத்துறை அமைச்சரும் இப்படி ஆய்வு மேற்கொள்ள ஆட்வம் காட்டியதில்லை எனக் கூறும் வீரர்கள், இந்த ஆய்வுப் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications