திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு செலவை குறைக்கும் உதயநிதி! மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வது இது தான்
சென்னை: திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு செலவை குறைக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணியில் பொறுப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளுமே வசதி படைத்தவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. வெவ்வேறு நிறுவனங்களில் மாதச் சம்பளத்திற்கு பணியாற்றும் பலரும் கூட பொறுப்புகளில் உள்ளனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளிடம் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதெல்லாம் இது தான். அதன் விவரம் அவர் கேட்டுக்கொண்டதன் படி பின்வருமாறு;
''பட்டாசு வெடிப்பதையும், பொன்னாடை, பூங்கொத்து கொடுப்பதையும் தவிர்க்குமாறு பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அதற்கு பதிலாக புத்தகங்கள், கழக வேட்டி-துண்டுகள் போன்றவற்றை தாருங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் மாநில மாநாட்டுக்கு, இளைஞர் அணிக்கு வளர்ச்சி நிதியாகவும் தரலாம். ''
''லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும், மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும், அவர்களுக்குப் பயன்படும்படி இன்னும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது.''
''இன்று ஒரு நாள் பயணமாக திருவள்ளூர் மாவட்டம் செல்கிறேன். அங்கும் காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம். மாலையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.''












Click it and Unblock the Notifications