Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்ரூவ்ட் பிளாட்.. அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. வந்தது அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம், சென்னை ஹைகோர்ட் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்திருந்தது.. அதாவது, சென்னையை சேர்ந்த அருண் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வரன்முறை செய்யாத அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் அடிப்படை வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

Unapproved plots Apply through online and what are major announcement by the TN Govt

அரசாணை: மேலும், பொதுவாக வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் அரசின் செலவில் சாலைகள் மற்றும் மேம்பாட்டு வசதிகளை செய்யக் கூடாது என்று தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அரசாணை பிறப்பித்திருந்தும்கூட, இந்த உத்தரவுகள் மீறப்பட்டுள்ளன. அதனால், தமிழகம் முழுவதும் வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் எந்த மேம்பாட்டு வசதியும் செய்யக் கூடாது என்ற அரசின் உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, சென்னை ஹைகோர்ட்டில் நடந்தது.. அப்போது தலைமை நீதிபதி கங்கா புர்வாலா தலைமையிலான அமர்வு, "அரசு ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அதற்கான வழிமுறைகளையும் வகுக்கிறது. அதைமீறி சில அதிகாரிகள் தவறாகச் செயல்படுகிறார்கள். இதை ஏற்க முடியாது. அந்த அதிகாரிகள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

வீட்டுமனைகள்: ஆக, வரன்முறை செய்யாத மனைகள் எந்த அடிப்படை வசதிகளையும் இனி பெற முடியாது.. அதேசமயம், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வாங்கும்போது, பொதுமக்கள் கவனமாகவும் இருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்டுள்ளது.

மனைப்பிரிவுகள்: இதுகுறித்து நகர ஊரமைப்பு இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், கடந்த 2016, அக்.20 அல்லது அதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைமற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்தாண்டு பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்தஇறுதி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+