பிங்க் நிற பேப்பரில் தங்க நகையை ஏன் சுற்றி தருகிறார்கள்? நகைக் கடைக்காரர்கள் தங்கமான ரகசிய உண்மை இதோ
சென்னை: தங்க நகைகளை வாங்கும்போதும் அல்லது அடகு வைக்கும்போதும் அவை பிங்க் நிற பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுவதை கவனித்திருப்பீர்கள்.. இதுக்கு பின்னால் பலருக்கும் தெரியாத சுவாரசியமான அறிவியல், உளவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் ஒளிந்துள்ளன.. அதன் முழுமையான பின்னணியை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தங்க நகைகளில் 22 கேரட் என்பது முழுமையான தங்கம் கிடையாது, அதில் உறுதித்தன்மைக்காக செம்பு போன்ற இதர உலோகங்கள் கலக்கப்படுகின்றன..

காற்றில் உள்ள ஈரப்பதம், ஆக்சிஜன் மற்றும் கந்தகம் ஆகியவற்றுடன் இந்த உலோகங்கள் வினைபுரியும்போது நகை கறுக்கத் தொடங்கும்.. பிங்க் நிற காகிதங்கள் பொதுவாக "ஆசிட்-ப்ரீ" மற்றும் மெல்லிய வேதியியல் பூச்சு கொண்டவை.. இவை ஈரப்பதத்தை உறிஞ்சி, நகையில் ஆக்சிஜனேற்றம் ஏற்படுவதைத் தடுத்து அதன் ஜொலிப்பைக் காலத்திற்கும் மாறாமல் பாதுகாக்கின்றன.. இதுவே அந்த அறிவியல் காரணமாகும்..
உளவியல் மற்றும் கவர்ச்சி
வண்ணங்கள் மனித மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.. அறிவியல் ரீதியாக, அடர் நிறப் பின்னணிகள் ஒளியை அதிகம் உள்வாங்கிக் கொண்டு நகையின் ஒளிர்வை வெளிச்சமிட்டுக் காட்டும்.. வெள்ளை காகிதத்தில் வைக்கும்போது ஒளியானது சிதறடிக்கப்பட்டு நகையின் மினுமினுப்பு குறையும்..
கறுப்பு நிறம் ஒளியை நன்றாக உறிஞ்சினாலும், அது துக்கத்தின் அடையாளமாக கருதப்படுவதால் தவிர்க்கப்படுகிறது.. எனவே, மகிழ்ச்சி மற்றும் அன்பின் அடையாளமான பிங்க் நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது.. இது தங்கத்தின் மஞ்சள் நிறத்தை இன்னும் எடுப்பாகவும், விலை உயர்ந்ததாகவும் காட்டுகிறது.. இதுவே அந்த உளவியல் காரணமாகும்..
கீறல்கள் மற்றும் பாதுகாப்பு
தங்க நகைகள் மிகவும் மென்மையானவை என்பதால் மற்ற நகைகளுடன் உரசும்போது எளிதில் கீறல்கள் விழும்.. பிங்க் காகிதம் மிகவும் மென்மையான சாஃப்ட் அமைப்பு கொண்டது.. இதில் நகைகளை சுற்றி வைப்பதன் மூலம் கற்கள் பதித்த நகைகளில் இருந்து கற்கள் நழுவாமல் இருப்பதற்கும், நுணுக்கமான வேலைப்பாடுகள் சிதையாமல் இருப்பதற்கும் இது ஒரு மெத்தையடி போன்ற பாதுகாப்பை வழங்குகிறது..
ஆன்மீகம் மற்றும் பாரம்பரியம்
இந்திய கலாச்சாரத்தில் தங்கம் என்பது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது.. பிங்க் மற்றும் சிவப்பு போன்ற வண்ணங்கள் மங்களகரமானவையாகவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடியவை என்றும் நம்பப்படுகிறது.. தீய சக்திகளின் பார்வை (Eye protection) படாமல் இருக்கவும், ஒரு மங்களகரமான பொருளை அதே போன்ற ஒரு வண்ணத்தில் பொதிந்து தருவது முறையானது என்பதும் ஒரு முக்கிய ஆன்மீக காரணமாகும்..
வணிக ரீதியான காரணம்
இது ஒரு நீண்டகால பாரம்பரியமாக மாறிவிட்டதால், "பிங்க் பேப்பர் என்றாலே தங்கம்" என்ற பிம்பம் வாடிக்கையாளர் மனதில் பதிந்துவிட்டது.. மேலும், மிக மெல்லிய இந்த காகிதங்கள் நகையின் எடையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதால் துல்லியமான எடையைக் கணக்கிடவும் இது வசதியாக உள்ளது..
இப்படி அறிவியல் ரீதியான பாதுகாப்பு, மனதைக் கவரும் உளவியல் மற்றும் கலாச்சார நம்பிக்கை ஆகிய மூன்றும் இணைந்தே தங்கத்தை பிங்க் காகிதத்தில் சுற்றச் செய்கின்றன..!!












Click it and Unblock the Notifications