ஓடிடி தளங்களுக்கு “சென்சார்” வருது.. ஒரே நாடு.. ஒரே சினிமா.. மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
சென்னை: ஓடிடி தளங்களுக்கு சென்சார் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், அமரன் போன்ற நல்ல படங்களை வரவேற்பது நாட்டின் மீது நாம் வைத்துள்ள மரியாதைக்கு அடையாளம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், "புதிய ஒளிபரப்புக் கொள்கை மூலம் ஓடிடிக்கு சென்சார் கொண்டு வரப்படும். கோவாவில் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 8 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது." என்றார்.

மேலும் பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் நடந்த உண்மைச் சம்பவத்தையே அமரன் படத்தில் காட்டியுள்ளனர். அமரன் படத்தில் தவறாக எதையும் சித்தரிக்கவில்லை. அமரன் போன்ற நல்ல படங்களை வரவேற்பது நாட்டின் மீது நாம் வைத்துள்ள மரியாதைக்கு அடையாளம். நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவை இன்று அதிகரித்து உள்ளது.
ஒரே நாடு, ஒரே சினிமா. வடக்கு தெற்கு என்ற பேதம் இல்லாமல் சினிமா துறையை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை மற்றும் பெங்களூரில் தற்போது ஹாலிவுட் படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இது இன்னும் அதிகரிக்க வேண்டும்.
தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்வதற்கு என்று சென்சார் போர்டு உள்ளது. இங்கு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகே, அனைத்து படங்களும் திரையரங்குகளில் வெளியாகும். சென்சாரின் போது அதிக வன்முறை, ஆபாசக்காட்சிகள், கலவரத்தை தூண்டும் வகையிலான காட்சிகள் நீக்கப்படும்.
தற்போது ஓடிடி தளங்கள், மக்கள் மத்தியில் பரவலாகி உள்ளன. ஏராளமான படங்கள், வெப் சீரிஸ்கள் அதில் வெளியாகி வருவதால், அதில் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகளை தடுக்கும் வகையில் ஓடிடிக்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஓடிடி தளங்களுக்கு சென்சார் வரும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications