கூட்டணியில்… இன்னும் பல கட்சிகள் வர உள்ளன… பொன். ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை:அதிமுக,பாஜக ,பாமக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் வாய்ப்பு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மே மாதம் நடைபெறும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. அதிமுக, பாஜக, பாமக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாஜகவுக்கு 5 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், பாமகவை விட கூடுதலாக... தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக முரண்டு பிடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக. காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவைகளுடன் கை கோர்க்கும் மற்ற கட்சிகள் குறித்து விரைவில் இறுதி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக,பாஜக ,பாமக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் வாய்ப்பு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக - பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல முடிவு வெளிவரும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications