தமிழகத்தில் செப்.7 முதல் தனியார் பேருந்துகள் ஓடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு பேருந்துகள் முழு வீச்சில் இயக்கப்பட்டன.

ஆனால் சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும்; பயணிகள் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
இந்த நிலையில் தங்களது கோரிக்கையான 2 காலாண்டுக்கான சாலை வரியை ரத்து செய்யாத காரணத்தால் தனியார் பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு அறிவித்தபடி செப்டம்பர் 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications