'சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்தாலும்'.. போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
சென்னை: சென்னையைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு எதிரான போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் அதனை ஏற்க முடியாது என்றும், போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது ஐகோர்ட்.
சென்னையைச் சேர்ந்த 25 வயதாகும் சதீஷ்குமார் கடந்த 2014-ம் ஆண்டு, 15 வயது சிறுமியை திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். பின்னர், ஒகேனக்கல் சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருக்கிறார். தங்கள் மகளை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் சென்னை திரும்பிய அந்த சிறுமி காவல் நிலையத்தில் ஆஜரானார். இதன்பின்பு, பெற்றோருடன் அந்த சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்.

சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள் இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ நீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது. இந்த தண்டனையை எதிர்த்து சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா முன்னிலையில் நடந்தது.
அப்போது சதீஷ்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரரும், சிறுமியும் காதலித்து வந்திருக்கிறார்கள். சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் மனுதாரர் சிறுமியுடன் உறவு வைத்திருக்கிறார். எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.
இதை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா, 'பாதிக்கப்பட்ட சிறுமி மைனர். அவர் விருப்பத்தின் பேரில்தான் மனுதாரர் உறவு கொண்டதாக கூறுவதை ஏற்க இயலாது. தற்போது அந்த சிறுமிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்திருக்கிறது. மனுதாரர் சிறுமியிடம் நடந்து கொண்டது எப்போதும் அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். மனுதாரர் கடுமையான குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறார். மனுதாரருக்கு தற்போது 25 வயது ஆகிறது.
சிறுமியுடன் உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது' இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications