இன்னும் சீரியஸ்னஸ் அதிகரிக்கலாம்.. தயாராக இருக்கிறோம்.. தமிழக மருத்துவ நிபுணர் குழு வார்னிங்
சென்னை: முகக் கவசத்தை முகத்தில் போட்டாலே, கொரோனா பரவல் குறைந்துவிடும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், மருத்துவ நிபுணர் குழு, ஆலோசனை நடத்தினர். இது முதல்வருடனான 5வது ஆலோசனை கூட்டமாகும்.
பின்னர் நிருபர்களிடம் மருத்துவர் குழுவை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கேஸ்கள் அதிகரித்து வருவது எதிர்பார்த்ததுதான். இது புது விஷயம் கிடையாது. இன்னும் சீரியஸ்னஸ் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சென்னை போன்ற சிட்டிகளில் மக்கள் நெருக்கமாக இருப்பதால், இது எதிர்பார்த்ததுதான்.

நோய்கள்
லாக்டவுனால், நாம் என்ன சாதித்தோம் என்றால்.. நம்மிடம் தயார் நிலை உள்ளோம். கேஸ்கள் அதிகரித்தாலும் அதை சமாளிக்க கூடிய தயார் நிலையில் நாம் உள்ளோம். இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியம். உடல் வலி, தலைவலி, காய்ச்சல் இருந்தால் வேலைக்கு செல்ல வேண்டாம். பிறரை சந்திக்கும் போது தான் வியாதி பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்.

முகத்தில் அணியுங்கள்
முக கவசம் என்பது மிகவும் கட்டாயம். கார்களில் செல்லும்போது முககவசம் கழுத்தில் தொங்குகின்றது. யாருடனாவது உட்கார்ந்து பேசும்போது முககவசம் கீழே இழுக்கப்படுகிறது. ஆனால், அப்போதுதான் முகக்கவசம் அவசியம். முகக் கவசத்தை கீழே இழுத்து விடாமல் பயன்படுத்தவும்.

செருப்பு மாட்டுவது போல
எப்படி வெளியே போகும்போது செருப்பு மாட்டிக் கொண்டு செல்கிறோமா, அதுபோல முக கவசம் அணிவது கட்டாயமாக பின்பற்றப்படவேண்டும். எச்சில் துப்பக் கூடாது. முகக்கவசம் அணியும் பழக்கம் உள்ள நாடுகளில் வைரஸ் பரவல் குறைவாக இருக்கிறது.

நோய் பாதிப்பு
வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வைரஸ் பரவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த வேண்டும். மீடியாக்களும், நோய் ரொம்பவே பரவி விட்டது என்று பெரிதுபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம். சென்னையில் சமூக பரவல் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications