தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு!
சென்னை: தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மதிமுக பொதுச்செயலளார் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி, நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை நிறுத்தி உத்தரவு
மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய உள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.

சட்டப்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை
தனக்கு எதிரான தீர்ப்பு சட்டவிரோதமானது என மனுவில் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் தனக்கு தெரிந்த விஷயங்களை வைத்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதாகவும் வைகோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் விசாரணை
மேலும் தனக்கு எதிராக குற்றச்சாட்டில் முழுமையான ஆதாரம், சாட்சி இல்லாத நிலையில் தனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் வைகோ தனது மனுவில் தெரிவித்துள்ளார். வைகோவின் மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications