தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்!
சென்னை: தமிழக சட்டசபையில் எனது குரல் ஒலிக்காது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் வைகோவை போட்டியிட அவரது கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தி வந்த நிலையில் அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அந்த 4-ல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னமான தீப்பெட்டி சின்னத்திலும் போட்டியிடுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அரியலூர், மதுராந்தகம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம் ஆகிய 6 தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
இதில் சாத்தூர், வாசுதேவநல்லூர், அரியலூர், மதுரை தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் வென்றது. இந்த நிலையில் வரும் தேர்தலில் கடந்த முறை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையே மதிமுக கேட்கக் கூடும். எனினும் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட பிரபலமான முகம் தேவை என்பதால் வைகோ போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர்.
இதனால் அவர் கோவில்பட்டி அல்லது சாத்தூர் தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் "வைகோவின் குரல் சட்டசபையில் ஒலிக்க வாய்ப்புள்ளதா" என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ, "ஒலிக்காது" என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், "இந்த தேர்தல் குறித்து ஏற்கனவே திட்டவட்டமாக கூறியுள்ளேன்.
திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சிகளும் வெல்லும். இதுவே தமிழக மக்களின் தீர்ப்பாக இருக்கும் என்றார். எனவே 4 தொகுதிகளிலும் மதிமுக நிர்வாகிகள்தான் போட்டியிடுவார்கள்.
மதிமுகவில் ஏற்கெனவே மல்லை சத்யா பிரிந்து தனி அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அது போல் மதிமுகவில் உள்ள சிலர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து மதிமுக தனி சின்னத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications