இரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று இரவு சந்தித்து பேசினார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

சுமார் அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு, நிருபர்களிடம் வைகோ அளித்த பேட்டி: மோசடியான வகையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதால்தான் உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு சில தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்காக வருகை தந்தேன்.
இன்றைய அரசியலில் வடகிழக்கு மாகாணங்கள் தீப்பிடித்து எரிகின்றன. டெல்லியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வருவது பாவச் செயல் என்ற அணுகுமுறையை எடுத்து அதன்மூலம் அவர்கள் திட்டத்தை ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள்.
காஷ்மீரில் தனி அந்தஸ்து நீக்குவது என்ற மாபெரும் கொடுமையைச் செய்தார்கள். இஸ்லாமியர் அல்லாதவர் இந்தியாவிற்குள் பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசத்தில் இருந்து வர முடியும். ஆனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடையாது. இது மிகவும் அநீதியானது, எனவேதான் குடியுரிமை திருத்த சட்டம் வங்காள விரிகுடாவில் தூக்கி வீசப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே கூறினேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
-
மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?! -
அமைச்சர் பதவி யாருக்கு? சீனியாரிட்டி எல்லாம் Secondary-தான்? மா.செ. கூட்டத்தில் சொன்ன ஸ்டாலின்? -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?












Click it and Unblock the Notifications