Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 எழுத்தை கண்டுபிடிச்சா ரூ.5 லட்சம்.. 'மகா கவிதை' நூலுக்காக மெகா பரிசு போட்டியை அறிவித்த வைரமுத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 39வது நூலான 'மகா கவிதை' விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் தலைப்பை வைத்து ரூ. 5 லட்சம் பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் வைரமுத்து.

இன்று தமிழ்த் திரையிசை பாடலாசிரியர்களில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் வைரமுத்து, 1980ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த 'நிழல்கள்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கவிஞராக நுழைந்தார். 40 ஆண்டு காலத்தைக் கடந்த சினிமா வாழ்க்கையில், அவர் 7,500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். இத்தனை ஆண்டு காலமாக இந்தியாவின் முன்னணி திரையிசைக் கவிஞராக வைரமுத்து கோலோச்சி வருகிறார்.

 Vairamuthu announces Rs 5 Lakh prize contest for his next poetry book

ட்ரெண்டிங்காக புதிய பாடலாசிரியர்கள் அறிமுகமாகி வரும் இக்காலத்திலும், தொடர்ந்து, படங்களுக்கு பாடல் வரிகளை எழுதி வருகிறார் வைரமுத்து. இதுவரை தனது திரையிசை பாடல்களுக்காக ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ளார் வைரமுத்து. இது எந்த இந்திய பாடலாசிரியருக்கும் இதுவரை கிடைக்காத கவுரவம். மேலும், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் சாகித்ய அகாடமி விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

திரையிசை மட்டுமின்றி, இலக்கியத்திலும் வைரமுத்துவின் பங்களிப்பு பெரிது. இதுவரை வைரமுத்து தமிழ் மொழியில் கவிதைகள் மற்றும் நாவல்கள் என 38 புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மற்றும் ரஷ்ய் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வைரமுத்துவின் பல புத்தகங்கள் தமிழ்நாட்டில் அதிக விற்பனையான புத்தகங்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளன.

இந்நிலையில், வைரமுத்துவின் 39வது நூல் விரைவில் வெளியாக உள்ளது. இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் இந்த புத்தம் புதிய படைப்புக்கு 'மகா கவிதை' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் வைரமுத்துவின் கவிதை நூல் இதுவாகும். விரைவில் இந்த நூல் வெளியிடப்பட உள்ளது. இதன் அட்டைப்படம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நூலை சூர்யா பதிப்பகம் வெளியிடுகிறது.

வைரமுத்துவின் 'மகா கவிதை' நூல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த நூல் தொடர்பாக, ரூபாய் 5 லட்சம் பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 'மகா கவிதை' என்னும் தலைப்பில் உள்ள ஐந்து எழுத்துகளில் 5 உள்ளடக்கங்கள் ஒளிந்துள்ளதாகவும், அதை கண்டுபிடிப்பவருக்கு 1 எழுத்துக்கு ரூபாய் 1 லட்சம் என மொத்தமாக 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் வைரமுத்து அறிவித்துள்ளார்.

போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 5 எழுத்துக்களின் உள்ளடக்கங்களையும் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும், இந்த போட்டியில் பரிசு வெல்பவர்களுக்கு, ரூ.5 லட்சம் பரிசை விழா மேடையில் வைத்து வழங்குவோம் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார் வைரமுத்து.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+