திருவள்ளுவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது- வைரமுத்து
சென்னை: திருவள்ளுவருக்கு வர்ண அடையாளம் பூசுவது என்பது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது என கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதராக குடுமி வைத்து விபூதி பூசப்பட்டவராக வரையப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகப் பொதுமறை திருக்குறள்;
— வைரமுத்து (@Vairamuthu) February 20, 2021
உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர்.
அவருக்கு
வர்ண அடையாளம் பூசுவது
தமிழ் இனத்தின் முகத்தில்
தார் அடிப்பது போன்றது.
ஏற்றுக்கொள்ள முடியாது.
திருத்துங்கள்; இல்லையேல்
திருத்துவோம்.#Thiruvalluvar #திருவள்ளுவர்#தமிழ்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளதாவது:
உலகப் பொதுமறை திருக்குறள்;
உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர்.
அவருக்கு
வர்ண அடையாளம் பூசுவது
தமிழ் இனத்தின் முகத்தில்
தார் அடிப்பது போன்றது.
ஏற்றுக்கொள்ள முடியாது.
திருத்துங்கள்; இல்லையேல்
திருத்துவோம்.
#Thiruvalluvar #திருவள்ளுவர்
#தமிழ்
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.