அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே... நீ ‘காமெடி’க் கதாநாயகன் - வைரமுத்து இரங்கல்
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே என்று நடிகர் விவேக் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! என்று விவேக் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
மாரடைப்பு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலையில் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு நடிகர்கள், திரை உலக பிரபலங்கள் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.
கலைச் சரித்திரம் சொல்லும் நீ 'காமெடி'க் கதாநாயகன் என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் வைரமுத்து. விவேக் மறைவுக்கு பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.