இயக்குநர் ஜனநாதன் இறப்பு ஒரு கெட்டியான துக்கம்- கவிஞர் வைரமுத்து
சென்னை: இயக்குநர் ஜனநாதன் இறப்பு ஒரு கெட்டியான துக்கம் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
இயக்குநர் ஜனநாதன் இறப்பு
ஒரு கெட்டியான துக்கம்.
அவருக்கு நானெழுதிய
'காதல் வந்தால் சொல்லியனுப்பு'
மறக்கவியலாது.
செலுலாய்டு புத்தகத்தின்
ஓர் இலக்கியப் பக்கம்
கிழிந்துவிட்டது என்பேனா?
வானவில்லில் முற்போக்குச் சிவப்பு
அழிந்துபட்டது என்பேனா?
வருந்துகிறேன்;இரங்குகிறேன்.
#jananathan
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
English summary
Writer Vairamuthu has Condoled demise of the Film Director Jananathan.
Story first published: Sunday, March 14, 2021, 14:52 [IST]